Skip to main content

காதல் கவி தேவதேவன்


நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி

அவரின் கவிதையுலகை அறிமுகப்படுத்தும் நிறைய நல்ல கட்டுரைகள், ரசனை குறிப்புகள், அவரின் கவி உள்ளம் செயல்படும் விதத்தை அருகிலிருந்து அனுபவித்த அனுபவப் பதிவுகள் என பலவும் எழுதப்பட்டுவிட்டன. அநேகமாக நவீன தமிழ் கவிஞர்கள் வரிசையில் அதிகம் மேற்கோள் காட்டப்படுவராகவும் அதிகம் விவாதிக்கப்பட்டவராகவும் தேவதேவன் இருக்கலாம். 





ஆனால் இன்று இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது அவர் ஒரு வகையில் காதல் கவிஞர் என்ற எண்ணமே எனக்கு முதலில் எழுந்தது. ஊட்டி குருநித்யா காவிய முகாமில் அவரது கவிதைகள் குறித்த விவாதத்தில் ஆசிரியர் ஜெ ஒருமுறை உலகில் எழுதப்பட்ட மிகச்சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக “காபி சாப்பிடலாம் வா..” கவிதையை குறிப்பிட்டார். அப்போதே அது ஆண் பெண் உறவு குறித்தான கவிதை மட்டுமல்ல என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனக்கு முதன் முதலாக “யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்” என்ற கவிதை வழியே தான் தேவதேவன் அறிமுகமாகியிருந்தார். என்னுள் எவ்வாறோ இந்த இரு கவிதைகளும் இணைந்து கொண்டன. ஒன்றின் பிரதிபலிப்பாக இன்னொன்று தோன்றியது. அல்லது ஒன்றின் நீட்சியாக இன்னொன்று. திருமணம் நிச்சயம் ஆன சமயத்தில் அவளுக்கு “காபி சாப்பிடலாம் வா..” கவிதையை யார் பெயரும் போடாமல் என்னுடைய கவிதையைப்போல அனுப்பியிருந்தேன். முதலில் “என்ன இது கல்யாணத்துக்கு முன்னாடியே கட்டிப்பிடி முத்தம் கொடுன்னு..? இப்டியெல்லாம் பேசுனா நா யோசிக்க வேண்டியிருக்கும்.. “ என்று ஒரு குறுஞ்செய்தி. தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டோமே எனத் தோன்றியது. ஐந்து நிமிட இடைவெளியில் அவளே அடுத்த செய்தியை அனுப்பினாள். “ஸாரி.. ஸாரி.. எனக்கு இப்பதான் புரிஞ்சுது, இந்த வாரம் காபி சாப்பிடலாம்” என்று அனுப்பியிருந்தாள். அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, ஆனால் திருமணம் முடியும் வரை அது என்னுடைய கவிதை என்பது மாதிரியே மெயின்டெய்ன் செய்து கொண்டேன்.


நேற்று கவிஞர் வேணு மொழிபெயர்த்த தேவதேவனின் கவிதை ஒன்று கவனத்திற்கு வந்தது. கவிதைகள் இதழில் வந்த If tickled.. எனும் கவிதை. கவிதை மொழியாக்கம் என்பது பிற மொழியினருக்கு கவிதையை கடத்ததுதல் என்பதைத் தாண்டி என்னளவில் முதன்மையாக அது கவிதையை தியானிக்கும் செயல்பாடு தான். எந்த மொழியாக்கமும் அவ்வகையில் மூலப்படைப்புடன் அதிக நேரம் செலவிடுவதற்கான முகாந்திரம் தான். அவ்வகையில் கவிஞர் வேணு தன் மொழியாக்கத்தால் கவிதையை அடிக்கோடிட்டு இருக்கிறார்.


காணுமிடத்தையெல்லாம் முத்தமிட்டு களிக்கும் கவிக்கு என் வணக்கம்.


If tickled... - DevaDevan ~ கவிதைகள்


Comments

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

தினமும் எழுந்துவரும் ஜோதி

  அன்புள்ள ஆசிரியருக்கு, “இதுவே இந்தச் சொற்களை அல்லது இம்மாதிரி வாக்கியங்களை வேற யாராச்சும் சொல்லிருந்தா எளிமையா தேய்வழக்குன்னு ஒதுக்கித் தள்ளியிருப்போம். ஆனா பாட்டி மாதிரி ஓர் ஆளுமை சொல்லும்போது சொற்களுக்கு உண்மையிலேயே உயிர் வந்திடுது” என்றார் கிருஷ்ணன் சார். எனக்கும் பள்ளி நாட்களில் யோகா ஆசிரியர் மூலமாக அறிமுகமான அச்சொற்கள் அப்போது எந்த அதிர்வையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் பாட்டியின் உச்சரிப்பில் அவை ஓர் அசரீரி போல் ஒலிப்பதை எண்ணிக் கொண்டேன். பாட்டிக்கு அச்சொற்களை சொல்லும் போது மட்டும் சுத்தமாக குரல் நடுங்குவதில்லை. உச்சரிக்கும் பொழுது முழுமைக்கும் சித்தம் அச்சொற்களுக்கே என ஒப்படைத்து அழுத்தம் திருத்தமாக சொல்வார், “அருட்பெருஞ்ஞ்ஞ்.. ஜோதி தனிப்பெருங்ங்ங்.. கருணை” கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நூறு அகவை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நாங்கள் திண்டுக்கல் காந்திகிராம ஊழியரகத்தை அடைந்த பொழுது நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தன, பேராசிரியர் பழனிதுரை உரையாற்றிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. காலை முதலே நிகழ்ச்சிகள், ஆசியளித்தல்கள் என இருந்திருக்கும் என...

One more Bottle!

எங்களை விட உயரம் குறைவாக இருந்தாலோ என்னவோ அவள் கண்களுக்குத்தான் பறவைகள் அதிகம் தட்டுப்பட்டன. அகல்யா. உயரத்தின் காரணத்தால் பார்வைகோணம் மாறுபடுவது மட்டுமல்ல, பொதுவாகவே இப்பயணத்தில் பல பறவைகளை முதலில் அடையாளம் காட்டியது அவளே. அதுவும் குறிப்பாக பார்வைக்கு அதிகம் சிக்காத குயிலனங்களை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் (Cuckoo Spotter!). மொத்தம் மூன்று ஜோடிகள் விஜயபாரதி-கெளசல்யா, கோபி-சரண்யா, திரு-காயத்ரி ; மூன்று பேச்சிலர்கள் (பயணத்தின் போது மட்டும்) ஈஸ்வரமூர்த்தி, ஞானவேல், நான்; நிறைய குழந்தைகள் ஆதித்யா, அகல்யா, அன்பரசி, மகிழ், மஞ்சரி என அந்த சிறுமலை பயணத்திற்கான குழு அமைந்திருந்தது. நாங்கள் முதல் நாள் சனி காலை கொடைக்கானல் ஏறும் பாதையில் ஒரு திருப்பமெடுத்து அங்கு பெருமாள்மலை என்ற பகுதியை ஒட்டி நிலைகொண்டோம். பகல் முழுக்க அங்கு பறவை பார்த்து முடித்துவிட்டு அங்கிருந்து சிறுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மொத்தம் மூன்று கார்களில் எங்கள் கார் முன்னரே அடிவாரத்தை அடைந்திருந்தது. இருபுறமும் மாந்தோப்புகள் தென்பட தொடங்கியிருந்தன. இவ்வருடம் மழை மற்றும் காற்றின் ஒத்துழைப்பில் பூக்கள் அதிகம் உதிராத...

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன். ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம். தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'ந...

சிறுமலை பயணம் - படங்கள்

One more Bottle - சிறுமலை பயணக் குறிப்பு குட்டீஸ்:)   Velvet-fronted Nuthatch கருந்தலைச் சில்லை தெக்கத்தி மலையில் இறுதிக் காட்சியாக துடுப்புவாலன் Choco Boy விழுப்புண் பெற்ற blue tiger Common Blue bottle The transparent one வழுக்குனா விட்ருவனா.. Rock agama, On top of the world The spotter while spotting அழகு ஆண்களின் நடுவே.. மலர்ச் சூரியன் ஆயிரம் ஜன்னல் வீடு துணை Shining Silver வழி வழிகாட்டி கருப்பண்ணசாமி வழித்துணையுடன் வேலி தாண்டிய மலர் படங்கள்: அன்பரசி, வேலு, பாரி. (நிறைவு)