Skip to main content

காதல் கவி தேவதேவன்


நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி

அவரின் கவிதையுலகை அறிமுகப்படுத்தும் நிறைய நல்ல கட்டுரைகள், ரசனை குறிப்புகள், அவரின் கவி உள்ளம் செயல்படும் விதத்தை அருகிலிருந்து அனுபவித்த அனுபவப் பதிவுகள் என பலவும் எழுதப்பட்டுவிட்டன. அநேகமாக நவீன தமிழ் கவிஞர்கள் வரிசையில் அதிகம் மேற்கோள் காட்டப்படுவராகவும் அதிகம் விவாதிக்கப்பட்டவராகவும் தேவதேவன் இருக்கலாம். 





ஆனால் இன்று இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது அவர் ஒரு வகையில் காதல் கவிஞர் என்ற எண்ணமே எனக்கு முதலில் எழுந்தது. ஊட்டி குருநித்யா காவிய முகாமில் அவரது கவிதைகள் குறித்த விவாதத்தில் ஆசிரியர் ஜெ ஒருமுறை உலகில் எழுதப்பட்ட மிகச்சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக “காபி சாப்பிடலாம் வா..” கவிதையை குறிப்பிட்டார். அப்போதே அது ஆண் பெண் உறவு குறித்தான கவிதை மட்டுமல்ல என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனக்கு முதன் முதலாக “யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்” என்ற கவிதை வழியே தான் தேவதேவன் அறிமுகமாகியிருந்தார். என்னுள் எவ்வாறோ இந்த இரு கவிதைகளும் இணைந்து கொண்டன. ஒன்றின் பிரதிபலிப்பாக இன்னொன்று தோன்றியது. அல்லது ஒன்றின் நீட்சியாக இன்னொன்று. திருமணம் நிச்சயம் ஆன சமயத்தில் அவளுக்கு “காபி சாப்பிடலாம் வா..” கவிதையை யார் பெயரும் போடாமல் என்னுடைய கவிதையைப்போல அனுப்பியிருந்தேன். முதலில் “என்ன இது கல்யாணத்துக்கு முன்னாடியே கட்டிப்பிடி முத்தம் கொடுன்னு..? இப்டியெல்லாம் பேசுனா நா யோசிக்க வேண்டியிருக்கும்.. “ என்று ஒரு குறுஞ்செய்தி. தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டோமே எனத் தோன்றியது. ஐந்து நிமிட இடைவெளியில் அவளே அடுத்த செய்தியை அனுப்பினாள். “ஸாரி.. ஸாரி.. எனக்கு இப்பதான் புரிஞ்சுது, இந்த வாரம் காபி சாப்பிடலாம்” என்று அனுப்பியிருந்தாள். அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, ஆனால் திருமணம் முடியும் வரை அது என்னுடைய கவிதை என்பது மாதிரியே மெயின்டெய்ன் செய்து கொண்டேன்.


நேற்று கவிஞர் வேணு மொழிபெயர்த்த தேவதேவனின் கவிதை ஒன்று கவனத்திற்கு வந்தது. கவிதைகள் இதழில் வந்த If tickled.. எனும் கவிதை. கவிதை மொழியாக்கம் என்பது பிற மொழியினருக்கு கவிதையை கடத்ததுதல் என்பதைத் தாண்டி என்னளவில் முதன்மையாக அது கவிதையை தியானிக்கும் செயல்பாடு தான். எந்த மொழியாக்கமும் அவ்வகையில் மூலப்படைப்புடன் அதிக நேரம் செலவிடுவதற்கான முகாந்திரம் தான். அவ்வகையில் கவிஞர் வேணு தன் மொழியாக்கத்தால் கவிதையை அடிக்கோடிட்டு இருக்கிறார்.


காணுமிடத்தையெல்லாம் முத்தமிட்டு களிக்கும் கவிக்கு என் வணக்கம்.


If tickled... - DevaDevan ~ கவிதைகள்


Comments

Popular posts from this blog

கொல்லிமலை பயணம் - அருகிருக்கும் ஷம்பாலா

தேர்தல் முடிவுகள் வரும்போது ஊரில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. என் வாழ்வில் நான் மிக முக்கியமானதாக கருதும் எழுத்துப் பணி ஒன்றை எனக்கு நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விசையை தக்கவைத்துக் கொள்ள

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?  ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,  “முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு. இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் ...

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா அந்த இடம் மட்டும் மரங்கள் அதிகமின்றி வானைநோக்கி வெட்டவெளியாக இருந்தது. வான்வெளி பூங்காவின் மைய வளாகம் ஒரு சிறிய கட்டிடம்.