Skip to main content

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன்.

ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான்.



இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம்.

தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாவலின் நாடக வடிவம் என அறிவிப்பில் பொதுவாக போட்டிருந்தாலும்  நாவலில் இடம்பெறும் குறிப்பிட்ட மூன்று நாடகீய தருணங்களை மட்டுமே இணைத்து நாடகத்தை அமைத்திருந்தார்கள். காரு மாமா சவரம் செய்யும் பணியில் இருக்கையில் தன் மனைவி ராசம்மா செட்டியுடன் ஓடிப்போய்விட்டாள் என்ற செய்தியை கேள்விப்படுவது முதல் தருணம். காலடித்தடங்களைக் கொண்டு மனைவியுடன் சேர்ந்து குழந்தைகளும் போய்விட்டார்கள் என்பதையறிந்து ஒரே நாளில் தன் உலகம் நிர்மூலமாகிவிட்டதை உணரும் கணம்.

அடுத்தக் காட்சி பனிரெண்டு ஆண்டுகள் கழித்து காரு மாமா  இறந்த பின்பு அவரின் சாவுக்கு வந்துசேரும் மனைவி ராசம்மாவும் வயதுக்கு வந்த பெண் ஈஸ்வரியும். நீண்ட தன்விளக்கமும், ஒப்பாரியும், தற்போதைய கையறுநிலையும் அரங்கேறும் இக்காட்சியில் ராசம்மாவாக தோன்றியவர் சிறப்பாக நடித்திருந்தார்.



நாவலின் இறுதியில் நடைபெறும் பகடை விளையாட்டு, நாவலை வாசித்தவர்கள் யாரும் மறக்க முடியாத பகுதி. ஒரு காதலும், இருவரின் வாழ்வும் மொத்த குடும்பத்தின் எதிர்காலமும் ஓர் எளிய பகடையாட்டத்தில் விளையாட்டாய் முடிவாகப்போவதாய் வரும். ஆனால் யோசித்துப் பார்த்தால் அத்தருணம் விளையாட்டானது அல்ல. எந்த மனித வாழ்விலுமே வாழ்வை தீர்மாணிக்கும் முக்கிய முடிவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நம் கரங்களாலோ அல்லது ஏதோவொன்றின் கரங்களாலோதான் எடுக்கப்படுகிறது. அந்த பகடையாட்டக் காட்சியை சுமார் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாக எடுத்திருந்தார்கள். எனவே அக்காட்சிக்கான போதிய 'அழுத்தம்' உருவாகமல் போய்விட்டதாக உணர்ந்தேன். அருகிலிருந்த விக்ரமும் தான் இதுவரை நாவல் வாசிக்காததால் இறுதிக்காட்சியில் எந்த எழுச்சியும் உருவாகவில்லை என்றார்.

நாடகம் முடிந்ததும் அதைக் குறித்த உரையாடல் பகுதி என்று அமைத்திருந்தார்கள். எழுத்தாளர் தேவிபாரதியும் அரங்குக்கு வந்திருந்ததால் அவருடன் வாசகர்கள் தங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளும் பகுதியாக அது மாறிப் போனது. தேவிபாரதி சார் சென்ற ஆண்டு பார்த்ததை விடவும் தற்போது உற்சாகமாகவும் உடல்நிலை முன்னேறி நன்கு பேசக் கூடியவராகவும் இருந்தார்.

நாடகம் குறித்த தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நாவலில் வரும் வாழ்க்கை எந்தளவு தன் சொந்த வாழ்வுடன் தொடர்புடையது என்று சொனார். காரு மாமாவையும் அந்த நிலத்தையும் அவர் தினமும் பார்த்து வளர்ந்திருக்கிறார். ஒருவகையில் அவர் நெருங்கிய சொந்தம் என்றார். ஆனால் நாவலில் புனைவம்சம் உள்ளது. புனைவு இல்லாமல் எதுவும் உண்மையோ முழுமையோ ஆவதில்லை. 'ஆதியாகமம்' நாவலையும் முடிக்க வேண்டிய இன்னும் இரு நாவல்களையும் முடித்தே தீருவேன் என்றார். 

அதன்பிறகு அவர் தான் பேசுவதை விடவும் பார்வையாளர்களிடம் உரையாடவே விரும்பினார். வாசகர்கள், நெருங்கிய நண்பர்கள் என மேடைக்கு பேச வந்த அனைவரின் கைகளையும் பற்றிக் கொண்டார். அனைவருமே அவரை நீண்டநாள் கழித்து நல்ல நிலையில் பார்ப்பதால் மொத்த அரங்குமே ஒருவித நெகிழ்ச்சியுடன் இருந்தது.

அவரின் நீண்டநாள் நண்பர் ஒருவர், அவருடன் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் தேவிபாரதியுடன் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். சினிமா பிரபலங்களுடன் நட்பில் இருப்பவர் எப்படி தன்னுடனும் எளிமையாக பழகுவார் என வியந்து வியந்து சொல்லிக் கொண்டிருந்தார். நண்பர் நல்ல நோக்கில் சொன்னாலும் எனக்கு எரிச்சலாக இருந்தது. நிழலின் தனிமையும், பிறகொரு இரவும், நட்ராஜ் மகராஜ்ஜும் எழுதியவரிடம்  நமக்கு வியப்பதற்கு வேறெதுவுமே இல்லையா? அவர் சினிமா பிரபலங்களிடம் விடியவிடிய இலக்கியம் பேசுவார் என்று எழுத்தாளர்களை குறித்து 'பெருமையாக' சொல்வதை இனிமேலும் தமிழ் கலைச்சமூகம் தொடரக்கூடாது. யோசித்துப் பாருங்கள் சிவக்குமாரோ, நாசரோ இருக்கும் மேடையில் அவர்களின் நண்பர்கள் யாராவது தேவிபாரதி சாருக்கே நாசரை அடையாளம் தெரியும் என்று பெருமையாக சொல்வார்களா என்ன?



நான் சென்று நண்பரின் இந்தக் கருத்துக்கான என் மறுப்பை அவையில் தெரிவித்தேன். மேலும் நாடகத்தில் காரு மாமாவும் ராசம்மாவாக நடித்தவரும் நன்றாக நடித்தார்கள் என்றும் இறுதிக் காட்சியின் அழுத்தம் மட்டும் போதவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்தேன்.

நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு அமைப்பாளர்கள் குறியாய் இருந்தனர். மாதாமாதம் மகரந்தம் வாசிப்பு இயக்கம் நடத்தும் இலக்கிய கூடுகைகளிலும் இந்த நேர ஒழுங்கு கடைபிடிக்கப்படுவதாய் சொன்னார்கள். பிரதி மாதம் மூன்றாம் சனி மாலை 5 முதல் 8 ஒரு புத்தகம் குறித்து இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாடகத்தை முன்னெடுத்ததோடு தொடர்ந்து வாசிப்பையும் முன்னெடுக்கும் ஈரோடு மகரந்தம் வாசிப்பு இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

***

தேவிபாரதி தமிழ் விக்கி

ந. முத்துசாமி தமிழ் விக்கி



மேலும் படங்கள்:





Comments

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

தினமும் எழுந்துவரும் ஜோதி

  அன்புள்ள ஆசிரியருக்கு, “இதுவே இந்தச் சொற்களை அல்லது இம்மாதிரி வாக்கியங்களை வேற யாராச்சும் சொல்லிருந்தா எளிமையா தேய்வழக்குன்னு ஒதுக்கித் தள்ளியிருப்போம். ஆனா பாட்டி மாதிரி ஓர் ஆளுமை சொல்லும்போது சொற்களுக்கு உண்மையிலேயே உயிர் வந்திடுது” என்றார் கிருஷ்ணன் சார். எனக்கும் பள்ளி நாட்களில் யோகா ஆசிரியர் மூலமாக அறிமுகமான அச்சொற்கள் அப்போது எந்த அதிர்வையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் பாட்டியின் உச்சரிப்பில் அவை ஓர் அசரீரி போல் ஒலிப்பதை எண்ணிக் கொண்டேன். பாட்டிக்கு அச்சொற்களை சொல்லும் போது மட்டும் சுத்தமாக குரல் நடுங்குவதில்லை. உச்சரிக்கும் பொழுது முழுமைக்கும் சித்தம் அச்சொற்களுக்கே என ஒப்படைத்து அழுத்தம் திருத்தமாக சொல்வார், “அருட்பெருஞ்ஞ்ஞ்.. ஜோதி தனிப்பெருங்ங்ங்.. கருணை” கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நூறு அகவை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நாங்கள் திண்டுக்கல் காந்திகிராம ஊழியரகத்தை அடைந்த பொழுது நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தன, பேராசிரியர் பழனிதுரை உரையாற்றிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. காலை முதலே நிகழ்ச்சிகள், ஆசியளித்தல்கள் என இருந்திருக்கும் என...

One more Bottle!

எங்களை விட உயரம் குறைவாக இருந்தாலோ என்னவோ அவள் கண்களுக்குத்தான் பறவைகள் அதிகம் தட்டுப்பட்டன. அகல்யா. உயரத்தின் காரணத்தால் பார்வைகோணம் மாறுபடுவது மட்டுமல்ல, பொதுவாகவே இப்பயணத்தில் பல பறவைகளை முதலில் அடையாளம் காட்டியது அவளே. அதுவும் குறிப்பாக பார்வைக்கு அதிகம் சிக்காத குயிலனங்களை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் (Cuckoo Spotter!). மொத்தம் மூன்று ஜோடிகள் விஜயபாரதி-கெளசல்யா, கோபி-சரண்யா, திரு-காயத்ரி ; மூன்று பேச்சிலர்கள் (பயணத்தின் போது மட்டும்) ஈஸ்வரமூர்த்தி, ஞானவேல், நான்; நிறைய குழந்தைகள் ஆதித்யா, அகல்யா, அன்பரசி, மகிழ், மஞ்சரி என அந்த சிறுமலை பயணத்திற்கான குழு அமைந்திருந்தது. நாங்கள் முதல் நாள் சனி காலை கொடைக்கானல் ஏறும் பாதையில் ஒரு திருப்பமெடுத்து அங்கு பெருமாள்மலை என்ற பகுதியை ஒட்டி நிலைகொண்டோம். பகல் முழுக்க அங்கு பறவை பார்த்து முடித்துவிட்டு அங்கிருந்து சிறுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மொத்தம் மூன்று கார்களில் எங்கள் கார் முன்னரே அடிவாரத்தை அடைந்திருந்தது. இருபுறமும் மாந்தோப்புகள் தென்பட தொடங்கியிருந்தன. இவ்வருடம் மழை மற்றும் காற்றின் ஒத்துழைப்பில் பூக்கள் அதிகம் உதிராத...

சிறுமலை பயணம் - படங்கள்

One more Bottle - சிறுமலை பயணக் குறிப்பு குட்டீஸ்:)   Velvet-fronted Nuthatch கருந்தலைச் சில்லை தெக்கத்தி மலையில் இறுதிக் காட்சியாக துடுப்புவாலன் Choco Boy விழுப்புண் பெற்ற blue tiger Common Blue bottle The transparent one வழுக்குனா விட்ருவனா.. Rock agama, On top of the world The spotter while spotting அழகு ஆண்களின் நடுவே.. மலர்ச் சூரியன் ஆயிரம் ஜன்னல் வீடு துணை Shining Silver வழி வழிகாட்டி கருப்பண்ணசாமி வழித்துணையுடன் வேலி தாண்டிய மலர் படங்கள்: அன்பரசி, வேலு, பாரி. (நிறைவு)