நான் மத நம்பிக்கையாளன் அல்ல. இதுவரை இறை நம்பிக்கையாளனும் கூட அல்ல. ஆனாலும் இது அடிக்கடி நேர்கிறது. வாழ்வுத் தருணங்களில் நாம் சோர்வடைந்தோ சற்றே குழப்பத்துடனோ மன சஞ்சலத்துடன் இருக்கையில் எங்கிருந்தோ ஒரு பைபிள் வசனம் ஒரு சுடரைப் போல நம்முன் தோன்றி நம் அகத்தை நமக்கே மீட்டளிப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்று ஒரு மருத்துவமனையின் காத்திருப்பு நேரத்தில் அவ்வாறான ஒரு தருணம் வாய்க்கப் பெற்றது. ஆண்டவருக்கு கட்டியணைத்து முத்தங்கள்.
என் இலக்கிய அனுபவங்களும் பயண அனுபவங்களும்