Skip to main content

Posts

Showing posts from 2026

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

கவிதைக் கலை: ஒரு பின்னோக்கிய பார்வை - எஸ்ரா பவுண்ட்

(ஜூலை மாத கவிதைகள் இதழில் வெளியான மொழியாக்கம். கவிதைகள் இதழுக்கு நன்றி) அறிமுகம் நவீனத்துவ யுகத்தின் இலக்கிய முகமாக கருதப்படும் எஸ்ரா பவுண்ட் கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் ஆகிய முகங்களைக் கொண்டவர். அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் 1885 இல் பிறந்தார். பென்சில்வேனியாவில் வளர்ந்த அவர் ஹாமில்டன் கல்லூரியிலும் அதன்பிறகு பென்சில்வேனியா பல்கலையிலும் பயின்றார். வில்லியம்ஸ் கார்லோஸ் வில்லியம்ஸ், ஹில்டா டூலிட்டில் (H.D.) ஆகியோரை அவர் அறிமுகம் செய்துகொண்டது அங்குதான். எம்.ஏ. பட்டம் பெற்றதும் ஒரு ஐரோப்பிய பயணம் மேற்கொண்டார். பின்னர் அமெரிக்க திரும்பி இண்டியானாவில் உள்ள வபாஷ் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியாராக பணியாற்றினார். பின்பு லண்டனுக்கே குடிபெயர்ந்த பவுண்ட் அங்கு பனிரெண்டு ஆண்டுகள் வாழ்ந்து பல எழுத்தாளர்களுடன் தொடர்பிலிருந்தார். அங்கு அவருக்கு W.B. யீட்ஸ், ஃபோர்ட் மெடாக்ஸ் ஃபோர்ட் போன்ற எழுத்தாளர்களுடனும் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், தத்துவவாதிகள் என பல்வேறு ஆளுமைகளுடன் தொடர்பு ஏற்பட்டது. 1912 ஆம் ஆண்டுவாக்கில் H.D., ரிச்சர்ட் அட்லிங்டன், F.S. ஃபிளிண்ட் ஆகியோருடன் இணைந்து பவுண்ட் படிமக் க...

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

மாருத லீலை

ஆடிக் காற்று வாங்க ஆடிவரை காத்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆணி பதினைந்து வாக்கிலேயே நல்ல காற்று வீசுவதாகத் தெரிந்தால் நீங்கள் மொட்டைமாடிக்குப் போகலாம், அதற்கு நகராட்சி சார்பில் அபராதம் எதுவும் கிடையாது. எப்போது நீங்கள் இரண்டு நாட்களாக தேடி சலித்த உள்ளாடையை பக்கத்து வீட்டுக்காரர் தங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு கரித்துணி விழுந்து கிடந்ததாகச் சொல்லி மீட்டுத் தருகிறாரோ அப்போதே நீங்கள் உஷாராகிவிட வேண்டும். அப்போதும் நீங்கள் அசமந்தமாக இருந்தால் அடுத்தக்கட்ட எச்சரிக்கை உங்கள் மனைவியிடமிருந்து வரும், “எத்தன வாட்டி சொல்றது, பொடவைக்கும் கிளிப்பு போடுன்னு.. எப்பதான் உனக்கு அறிவு வருமோ?” நமக்கு எப்போது அறிவு வரும் என்று யோசிப்பது நல்ல தத்துவார்த்த கேள்வியாகப் பட்டது. ஆனால் தத்துவக் கேள்விகளை விசாரிக்க வீட்டு சோபா உகந்த இடமல்ல. இதை ஏன் நாம் ஒரு மாலை நடை சென்றபடியே சிந்திக்கலாகாது? “அறிவியாலாளர்கள் முதல் தத்துவஞானிகள் வரை தங்களுக்கான விடையை இயற்கையின் மகத்தான தற்செயலிலிருந்தே பெற்றிருக்கிறார்கள். உங்கள் உள்ளார்ந்த கேள்வியுடன் பிரபஞ்சத்தை செவிகூருங்கள், அது உங்களுக்கு விடையளிக்கும்.” என்ற மேற்கோளை...

சென்னை பயணம் (2) - எய்டன் சென்ற பாதையில்

சென்னை பயணம் - மானசா பதிப்பக விழா இரண்டாம் நாள் காலை விஜய்(பாரதி) அண்ணா தலைமையில் பறவை பார்த்தல். நாங்கள் ஈரோடு கோஷ்டி பூநாரைகள் பார்க்க வேண்டும் என்றதும் அதற்கேற்ப கேளம்பாக்கம் அருகே ஒரு இடத்தை முடிவு செய்திருந்தார். அவரின் கணிப்புத் தவறவில்லை. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பூநாரைகளைக் கண்டு களிப்புற்றோம். அவை வெயிலில் நிற்பது, ஒற்றைக்கால் தவம் செய்வது, நின்ற வாக்கிலேயே தூங்குவது என நீண்டநேரம் அவற்றுடன் இருந்தோம். கூடவே வலசை பருவத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் Curlew, Whimbrel, Redshank, Greenshank போன்ற பறவைகளையும் நெடுங்கால் உள்ளான் குஞ்சுகளையும் காண முடிந்தது. வலசை பருவம் முடிந்த பின்பும் ஜூலை மத்தியில் இவற்றையெல்லாம் காண முடிவது அரிது தான் என்றார் விஜயபாரதி. சில பறவைகள் long wintering என்ற பெயரில் இவ்வாறு தங்கிவிடுவது உண்டாம். பறவை பார்த்தல் முடித்து நவீன் வீட்டுக்குத் திரும்பவே மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. சென்னை நகருக்குள் பயணமே பெரும் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. எங்களுக்கு மிச்சம் இருந்தது ஒரேயொரு ஞாயிறு மாலை. தரமணி இரயில் நிலையத்தில் Fort station என்ற வாசகம் கண்ணில் பட வெள்ளை...

சென்னை பயணம் - மானசா பதிப்பக விழா

  மானசா பதிப்பகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பெண் எழுத்து சார்ந்த அரங்கம் மற்றும் பதிப்பகத்தின் முதல் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ரஞ்சனியும் நானும் சென்னை சென்றிருந்தோம். அதிகாலை ஏற்காடு வண்டியில் சென்றிரங்கியவுடன் நண்பர் நவீன் வீட்டில் தஞ்சம். அவர் வீட்டின் உறுப்பினரான சிம்பா எங்களை வரவேற்றான். சிம்பா பீகல் இனத்தவன். இரண்டு வருடம் முன்பு கோவையில் அவனை சந்தித்ததை நினைவில் வைத்திருந்தான். நாங்கள் சென்றதும் ஒரு துணிப்பொம்மையை எடுத்து காலடியில் வைத்துக் கொண்டு யாருக்கும் தரமாட்டேன் என்றான். அதை எடுக்க முயன்று தோற்பதுபோல் நாம் விளையாட வேண்டுமாம். கிளம்பி விழா நடைபெறும் கவிக்கோ மன்றம் சென்றோம். பேனர் அமைக்கும் வேலை, சிற்றுண்டி ஏற்பாடு, விருந்தினர்களை அழைத்து வருவது போன்ற வேலைகளை பயணத்தின் போதே நவீன் போனில் ஒருங்கிணைத்துக் கொண்டே இருந்தார். டாக்டர் ஜெகன், விஜயபாரதி,சபரிஷ், சூரஜ் போன்ற நண்பர்கள் அவரவர் வேலைகளை எடுத்துக் கொண்டனர். விருந்தினர் பத்மா விஸ்வநாதனை அழைத்துவரச் சென்ற நவீனுடன் நானும் இணைந்து கொண்டேன். அந்த வகையில் அவருடன் கொஞ்சம் உரையாட முடிந்தது. அவர் பிரேசில்...