![]() |
| பேய்மிரட்டி |
வானைநோக்கி எரிந்தணைந்தது போல் காட்சியளித்தது அந்த மலர்க்கொத்து.
காலைநடையின் போது சாலையோர புதர்ச்செடிகளை நோட்டம் விடுவது வழக்கம். தொட்டால் உதிர்ந்து விடுமோ எனத் தோன்றியது. மலர்களா விதைகளா என்ற ஆர்வத்தில் அருகில் சென்று பார்த்தேன். தொட்டுப் பார்த்ததில் திடமாகவே இருந்தது. இரண்டு வாரம் முன்னர் இச்செடியில் ஊதா நிறப் பூக்கள் இருந்ததாக நினைவு. ஆனால் சுத்தமாக நிறங்களை உதிர்த்துவிட்டு சருகுபோல எஞ்சும் இந்த நிலையே என் கவனத்தை மேலும் ஈர்த்திருக்கிறது.
படம் எடுத்து அகில உலக டீச்சரிடம் விவரம் கேட்டேன். உடனடியாக விரிவான பதில். பேய்மிரட்டி என்றும் மூலிகை மருந்தாகவும் கொசுவிரட்டும் தூபமாகவும் பயன்படுத்தலாம் என்றார். தாவரவியலில் அடுக்களாக அமைந்த மலர்க்கொத்தை மஞ்சரி என்றழைக்கிரார்கள். ஆங்கிலத்தில் inflorescence.
வெகுகாலம் முன்னர் இச்செடி அரிதாக இருந்ததாகவும் இதைத் தேடி ஆனைமலைப் பகுதிகளில் அலைந்திருப்பதாகவும் டீச்சர் கூறினார். பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்கால் வழி சமநிலத்திற்கு விதைகள் பரவி இப்போது எங்கும் காணக்கிடைக்கிறதாம்.
பேய்களை விரட்ட மலைமீதிருந்து இறங்கி வந்த தெய்வம்!
#morningwalks #flowers

Comments
Post a Comment