Skip to main content

அஸ்பெஸ்டாஸ் மனிதன் - பின்புலம்- குறிப்பு


பொதுவாக ஒரு சூழலின் அபத்தங்களை அச்சூழலிலிருந்து முற்றிலும் அந்நியமான ஒரு நபரே எளிதில் சுட்டிக்காட்ட முடியும். நிகழ்கால வாழ்வின் அபத்தங்களை சுட்டிக்காட்டுவது என்பது இலக்கியம், நாடகம் சினிமா என அனைத்து கலைவடிவங்களுக்கும் எப்போதும் விருப்பமான பேசுபொருள்.

அவ்வகையில் ஒரு படைப்பை கட்டமைக்க படைப்பாளிகள் கையாளும் பிரபலமான யுக்திகள் இரண்டு: முதலாவது ஓர் உலகத்துக்கு முற்றிலும் அந்நியமானவனை கதைச்சூழலில் உலவவிட்டு அவனது பார்வையில் கதையை சொல்வது. எமதர்மன் பூமிக்கு வருவது அல்லது மனிதன் நரகத்துக்கு போவது என்பதுபோல. புதுமைபித்தனின் கடவுளும் கந்தசாமிபிள்ளையும் கதை இவ்வகைமைக்குச் சிறந்த உதாரணம். இரண்டாவது யுக்தி காலப்பயணம் மேற்கொள்வது. தூரத்து கடந்துகாலத்துக்கோ அல்லது எதிர்காலத்துக்கோ கதைநாயகனை பயணிக்கவைத்து கதை சொல்வது. அஸ்பெஸ்பெஸ்டாஸ் மனிதன் இவ்வகைக் கதை.


இம்மொழியாக்கத் தொடரில் ஒரு இலகுவான கதையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தவுடன் முதலாவதாக நினைவுக்கு வந்த பெயர் ஸ்டீபன் லீகாக். முன்பு தளத்தில் வந்திருந்த இப்பதிவின்  மூலமே இவரை அறிந்தேன். அப்போது இக்கதை என்னுள் பெரும்சலனம் எதுவும் ஏற்படுத்தாவிட்டாலும் பகடிக் கதை என்ற அளவில் நினைவில் நீடித்தது. இப்போது மீண்டும் வாசிக்கையிலும் இக்கதைக்கான மனநிலையுடன் வாசித்தால் நல்ல கதையாகவே பட்டது. மொழியாக்கத்தை பகிர்ந்த போது சில நண்பர்கள் இக்கதை சற்றே சுமாரானதாக இருப்பதாய் சந்தேகித்தனர். தீவிரமாக எதையேனும் எதிர்பார்த்திருப்பார்கள் போலும். அல்லது வாசகர்கள் இக்கதையை நேரடி அர்த்தத்தில் வாசிப்பார்களோ என்ற ஐயமும் எனக்குள்ளது.

மேலும் கதை எழுதப்பட்ட காலகட்டம் (1911). பகடிக் கதை என்ற அளவிலேயேகூட இக்கதையில் இடம்பெறும் இயற்கையை கைப்பற்றுதல் மற்றும் பெண்கள் குறித்தான சிந்தனைகள் இன்றைய நோக்கில் சற்றே ஒவ்வாதவை. இந்த பின்புல அறிதலோடு வாசிப்பவர்களே இக்கதையை சரியான அணுகமுடியும் என நினைக்கிறேன். எவ்வாறிருப்பினும் அனைத்துவகை எழுத்துக்கும் இங்கு இடமிருக்கிறது இங்கு பதிகிறேன்.

மூலம்: Nonsense novels தொகுப்பின் அனைத்து கதைகளும் இங்குள்ளது,

Comments

Popular posts from this blog

கொல்லிமலை பயணம் - அருகிருக்கும் ஷம்பாலா

தேர்தல் முடிவுகள் வரும்போது ஊரில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. என் வாழ்வில் நான் மிக முக்கியமானதாக கருதும் எழுத்துப் பணி ஒன்றை எனக்கு நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விசையை தக்கவைத்துக் கொள்ள

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?  ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,  “முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு. இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் ...

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா அந்த இடம் மட்டும் மரங்கள் அதிகமின்றி வானைநோக்கி வெட்டவெளியாக இருந்தது. வான்வெளி பூங்காவின் மைய வளாகம் ஒரு சிறிய கட்டிடம்.

காதல் கவி தேவதேவன்

நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி