Skip to main content

‘கலை காலமற்றது’ - The Preserving Machine - குறிப்பு


கலைகுறித்த சொல்லாடல்களில் உதிர்க்கப்படும் பிரபலமான வாக்கியங்களுள் ஒன்று ‘கலை காலமற்றது’. இது உண்மைதானா? ஒருமுறை உயிர்கொண்டுவிட்ட கலைப்படைப்பு முடிவிலிவரை தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளுமா என்ன? ஆம், ஒருவகையில் உண்மைதான். கம்பனும் வள்ளுவனும் நம் கணினிகளில் வந்தமர்ந்திருப்பது அவ்வாறே. வியாசன் மற்றும் வால்மீகியின் சொற்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை பாடப்படாத ஒருநாள்கூட இந்நிலத்தில் கடந்துசென்றிருக்காது. காத்திரமான கலைப்படைப்புகள் யாவும் நிச்சயம் காலம்கடந்து நிற்கும் என்பதை சிந்திக்கும் எவரும் உணரலாம். ஆனால் இந்த உண்மைமீது நமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதில்லை. எங்கோ ஓர் மூலையில் நமது ஆழம் இதை சந்தேகித்தவாறே இருக்கிறது. காலன் எனும் விராடநாயகன்முன் நம் கலைப்படைப்புகள் எஞ்சுமா என்ற கேள்வி நம்மை எப்போதும் துரத்தி வருகிறது. எனவே எப்போதும் அனைத்தையும் ஆவணப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், அருங்காட்சியகங்கள் அமைக்கிறோம், தற்போது இணையம்வழியாக பெரும் திரட்டுகளை சேமித்து வைக்கிறோம். எனினும் அந்த ஆதி ஐயம் நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை. அது எப்போதும் நம்மில் இருந்து கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.

கலையை காலத்தில் ’நிறுத்துவது’ குறித்து சில விசித்திர கற்பனைகள் கொண்டது இக்கதை. மேற்கத்திய இசையில் ஆர்முள்ளவர்களுக்கு மேலதிகமாக வாசிப்பனுபவம் கிட்டலாம்.





Comments

Popular posts from this blog

கொல்லிமலை பயணம் - அருகிருக்கும் ஷம்பாலா

தேர்தல் முடிவுகள் வரும்போது ஊரில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. என் வாழ்வில் நான் மிக முக்கியமானதாக கருதும் எழுத்துப் பணி ஒன்றை எனக்கு நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விசையை தக்கவைத்துக் கொள்ள

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?  ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,  “முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு. இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் ...

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா அந்த இடம் மட்டும் மரங்கள் அதிகமின்றி வானைநோக்கி வெட்டவெளியாக இருந்தது. வான்வெளி பூங்காவின் மைய வளாகம் ஒரு சிறிய கட்டிடம்.

காதல் கவி தேவதேவன்

நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி