Skip to main content

பிரபஞ்ச மெளனம் - குறிப்பு


அன்பின் ஜெ,

இம்முறை ஊட்டி முகாமில் எனக்கு முக்கிய அறிமுகமாக இருந்தது அறிவியல் புனைவுதான். அதன் வரலாறு, இலக்கணம், எல்லைகள், சாத்தியங்கள் என சுசித்ரா மற்றும் கமலக்கண்ணன் அரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அறிவியல் கதைகள் ஆங்கிலத்தில் இருப்பதாலும் அதன் அறிவியல் தகவல்சார்ந்த பின்னணி காரணமாகவும் வாசிப்பு சவால் கொண்டதாக இருப்பதாக சிலர் குறிப்பிட்டனர். நான் சுசித்ரா பகிர்ந்திருந்த கதைகளில் டெட் சியாங்கின் மூன்று கதைகளை வாசித்திருந்தேன். எனக்கு மூன்றுமே ஆர்வமூட்டும் வாசிப்பாகவே இருந்ததுஅவற்றுள் Great Silence கதை ஒப்புநோக்க சிறியது. எனவே வாசிக்கும்போதே அதை மொழிபெயர்க்க முயற்சித்தாலென்ன எனத் தோன்றியது. என்னளவில் Exhalation கதையே மூன்றில் முதன்மையானது. இருப்பினும் முதல் மொழியாக்க முயற்சி காரணமாக Great Silence கதையை எடுத்துக் கொண்டேன்.

Great Silence கதை ஒரு தவிர்க்க முடியாத சூழியல் கேள்வியை கேட்பதாகத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அது வெறும் உயிரின அழிவைப் பற்றி மட்டும் பேசவில்லை. அனைத்து உயிர்களுக்கும் இருக்க சாத்தியமுள்ள மரபை பற்றி பேசுகிறது. மனிதன் தன்னை குறித்தும் உலகை குறித்தும் கொண்டுள்ள மாயைகளை பற்றி பேசுகிறது. இக்கதையின் முக்கிய விமர்சனமாக இதில்கதைத்தன்மைஇல்லாததை ஊட்டியில் பேசிக் கொண்டிருக்கும்போது சுசித்ரா குறிப்பிட்டார். ஓர் அழகியல் விமர்சகனாக அது நிச்சயம் ஏற்கதக்கது. இருப்பினும் இக்கதை எழுப்பும் ஆதார கேள்விகளும் அதற்கு எடுத்துக்கொண்ட தத்துவார்த்த அனுகுமுறையும் முக்கியமானதென நினைக்கிறேன்.

கதைகளை அறிமுகப்படுத்திய சுசித்ராவுக்கு நன்றி.

ஜெ தளத்தில்: https://www.jeyamohan.in/121561


மூலம்: The great silence - Ted Chiang - https://electricliterature.com/the-great-silence-by-ted-chiang/ 


Comments

Popular posts from this blog

கொல்லிமலை பயணம் - அருகிருக்கும் ஷம்பாலா

தேர்தல் முடிவுகள் வரும்போது ஊரில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. என் வாழ்வில் நான் மிக முக்கியமானதாக கருதும் எழுத்துப் பணி ஒன்றை எனக்கு நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விசையை தக்கவைத்துக் கொள்ள

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?  ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,  “முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு. இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் ...

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா அந்த இடம் மட்டும் மரங்கள் அதிகமின்றி வானைநோக்கி வெட்டவெளியாக இருந்தது. வான்வெளி பூங்காவின் மைய வளாகம் ஒரு சிறிய கட்டிடம்.

காதல் கவி தேவதேவன்

நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி