Skip to main content

All Summer in a Day - குறிப்பு


எம் எஸ் அவர்களின் மொழியாக்கத்தில்அமைதியான ஒரு மாலைப்பொழுதில்’ (“In a Season of Calm Weather”) வாசித்தபோதுதான் ரே பிராட்பரியை முதன்முதலாக கேள்வியுற்றேன். வடிவம் மற்றும் தரிசனம் சார்ந்து நான் வாசித்த மிகச் சிறந்த கதைகளுள் ஒன்று அக்கதை. அப்போதிருந்தே அந்த பெயரின்மீது ஒரு கவனம் இருந்தது. இப்போது இவரது ‘All summer in a Day' எனும் சிறுகதையை மொழியாக்கம் செய்ய முயன்றுள்ளேன். இவர் பொதுவாக அறிவியல்புனைவு (Science Fiction) எழுத்தாளர் என அறியபட்டாலும், இவர் அதை மறுத்து, தன்னை பிராதானமாக மிகைக்கற்பனை (Fantasy) எழுத்தாளர் என்றே கூறிவந்துள்ளார். நான் எடுத்துக்கொண்ட இக்கதையும் கூட அறிவியல்மிகைக்கற்பனை என்ற வகைமையில் வர வாய்ப்புள்ளது. இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்க்கான காரணம் இந்த ஆசிரியரையும், வகைமையையும் கவனப்படுத்தும் நோக்கில் மட்டுமே.

முதல்நோக்கில் எளிய கதைபோன்று தோற்றமளித்தாலும் சூரியன் எனும் ஆதி படிமத்திற்கு வாசகன் அளிக்கும் அர்த்தங்கள் மூலம் விரியக்கூடியது இக்கதை.


Comments

Popular posts from this blog

கொல்லிமலை பயணம் - அருகிருக்கும் ஷம்பாலா

தேர்தல் முடிவுகள் வரும்போது ஊரில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. என் வாழ்வில் நான் மிக முக்கியமானதாக கருதும் எழுத்துப் பணி ஒன்றை எனக்கு நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விசையை தக்கவைத்துக் கொள்ள

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?  ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,  “முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு. இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் ...

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா அந்த இடம் மட்டும் மரங்கள் அதிகமின்றி வானைநோக்கி வெட்டவெளியாக இருந்தது. வான்வெளி பூங்காவின் மைய வளாகம் ஒரு சிறிய கட்டிடம்.

காதல் கவி தேவதேவன்

நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி