Skip to main content

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

(கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய செய்திக்கட்டுரை நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)


 மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர். 

ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான எளங்கூர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையான என்.டி.ஜெயஸ்ரீயுடனான  டாக்டர் பவித்ராவின் கதகளி நட்புதான் அந்த தமிழ்நாட்டு நண்பர்களை இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு வரவைத்தது.

மலையாளம் மற்றும் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே ஒருவகையான  பாலம் போல செயல்படும் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் கதகளி அனுபவக்கட்டுரையை  படித்த பிறகே கதகளியுடன் தனக்கு நெருக்கம் ஏற்பட்டதாக டாக்டர் பவித்ரா சொல்கிறார்.  இலக்கியம்தான் அந்த 6 பேருக்கும் பொதுவானது. அனைவரும் ஜெயமோகனின் வாசகர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பை சேர்ந்த ஜெயமோகன் எம்.கோவிந்தன் முதல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வரையிலான கவிஞர்களின் கவிதைகளை 'தற்கால மலையாளக் கவிதைகள்' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மலையாளத்தின் 5 இளம் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து 'இன்றைய மலையாளக் கவிதைகள்' எனும் தலைப்பில் தமிழில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் கதகளி உட்பட கேரள கலை வடிவங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் புனைவுலகத்திலிருந்துதான் கதகளியின் அழகியலையும் வரலாற்றையும் தமிழ் நண்பர்கள் முதன்முதலில் அறிந்து கொள்கிறார்கள். நேரடியாக  கதகளி நிகழ்வுகளை பார்த்தபோது கதகளியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் விழைவால்  கதகளி ஆட்டங்களின் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்து, அடிப்படை முத்திரைகளை  புரிந்துகொண்டனர். Kathakali plays in english (vol1,2,3,4) by agatha jane pillaar என்ற நூலில் ஒவ்வொரு கதகளி ஆட்டக்கதைக்குமான ஆங்கில வடிவம் உள்ளது. அதை வாசித்து மொழி சார்ந்த தடையை கடந்தனர். ஆங்கிலத்தில் மேலும் கதகளி சார்ந்து நூல்களின் தேவை இருக்கிறது என்றும், அதற்கான முயற்சிகள் தேவை என்றும் அந்த நட்புக்குழுவில் ஒருவர் சொன்னார்.  

அந்த நட்புக்குழுவில் உள்ள மணவாளன் 7 வருடங்களாக கதகளி பார்ப்பவர், மலையாளமும் தெரியும். கதகளியின் அழகியல் அம்சங்களை மலையாளத்தில் உள்ள நூல்கள், கதகளியின் கலைஞர்களின் தன்வரலாறுகள், நேர்காணல்கள் வழியாக வாசித்தவர். நிகழ்வின்போது கதகளியின் ஆட்டக்கதையில் உள்ளவற்றையும் அதன் பின்னணியில் உள்ள புராணக்கதை, உபகதைகள், கைமுத்திரைகள், சங்கீதம், நிருத்த அம்சம்கொண்ட ஆட்டங்கள், முகஃபாவங்கள் போன்ற அம்சங்களை பிற நண்பர்களுக்கு விளக்குகிறார். மேலும் அந்த நண்பர்கள் google translate, chatgpt வழியாக  கதகளி பதங்களை(கதகளி பாடல்வரிகளை) மொழிபெயர்த்தும் புரிந்துகொள்கிறார்கள். மலையாளத்திற்கும் தமிழிற்கும் இடையே நிறைய பொதுசொற்கள் இருப்பதால், கதகளி பதங்களில் அந்த சொற்கள் நிறையவே இருப்பதாலும் கதகளி பதங்களை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்று அந்த நட்புக்குழுவில் ஒருவர் சொன்னார். ஆறுபேரும் கதகளி தொடர்ச்சியாக பார்க்கிறார்கள். கதகளியை மேலும் அணுக தொடர்ந்து பயணம் செய்கிறார்கள். 

வாழேங்கடா என்ற ஊரில் உள்ள ”குஞ்சுநாயர் டிரஸ்ட்” என்ற கதகளி டிரஸ்டில் நிகழ்ந்த ‘கீசகவதம்’ கதகளி பார்க்கும்போதுதான் அந்த தமிழ் நண்பர்களில் ஒருவரனான  Dr.பவித்ராவிற்கு கதகளி ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ அறிமுகமாகிறார். அறிமுகம் என்பதற்கப்பால் அது கதகளி சார்ந்த உரையாடலாகவும்  வளர்கிறது. கேரளத்தில் எங்கு முக்கியமான கதகளி நிகழ்ந்தாலும், ஜெயஸ்ரீ இந்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறார். அவற்றில் தங்களுக்கு வசதிப்பட்ட கதகளி நிகழ்வுகளை இந்த நண்பர்கள் பார்க்க செல்வார்கள்.

இந்த நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரி நினைவேந்தல் விழாவில் விருதுவிழா,கதகளி நிகழ்வுடன், நளசரிதம் கதகளியின் அழகியல் பற்றி கதகளி கலைஞர் பீஷப்பிள்ளி ராஜீவனின் lec-demமும் இருந்தது. இந்த நண்பர்களுக்கு அந்த lec-dem மிகவும் பிடித்திருந்தது. தமிழ்நாட்டில் பீஷப்பிள்ளி ராஜீவனை அழைத்து அதேபோல lec-dem நடத்துவது தொடர்பாக அந்த நண்பர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நினைவேந்தல் நிகழ்வில் கல்யாணசௌகந்திகம் கதகளி நடந்தது. அதைமுழுமையாக பார்த்துவிட்டே நண்பர்கள் கிளம்பினர். கேரளத்தின் பலபகுதிகளிலிருந்து கதகளி ரசிகர்களும், கதகளி கலைஞர்களும் அந்த நிகழ்விற்கு வந்திருந்தனர். தமிழ் நண்பர்கள் அவர்களிடம் அறிமுகப்படுத்துக்கொண்டனர். நெல்லியோடு நம்பூதிரியின் நினைவேந்தல் வருடாவருடம் நிகழும். அடுத்த வருடமும் தாங்கள் கண்டிப்பாக கலந்துகொள்வதாக உறுதியளித்துவிட்டுதான் அந்த நண்பர்கள் விடைபெற்றனர்.

Comments

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...